யூனிபார்ம் டைட்டாக அணிந்து வந்ததால் மாணவனை கொடூரமாக தாக்கிய தனியார் பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட்
கோவையில், யூனிபார்ம் டைட்டாக அணிந்து வந்ததால், 11-ஆம் வகுப்பு மாணவனை கொடூரமாக தாக்கியதாக கூறப்படும் குற்றச்சாட்டில், ஆசிரியரை தனியார் பள்ளி நிர்வாகம் சஸ்பென்ட் செய்துள்ளது.
சி.எம்.எஸ். மெட்ரிகுலேஷன் பள்ளியில், 11ஆம் வகுப்பு பயின்று வந்த அந்த மாணவன், பள்ளியில் கொடுத்த யூனிபார்ம் பெரிதாக இருந்ததால் ஆல்ட்டர் செய்து டைட்டாக போட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதற்காக, அந்த பள்ளியில் பணிபுரியும் இயற்பியல் ஆசிரியர் சிவரஞ்சித், மாணவனை கொடூரமாக தாக்கியதாக சொல்லப்படும் நிலையில், மாணவனின் தந்தை சரவணம்பட்டி போலீசாரிடம் புகார் அளிக்கவே, ஆசிரியர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், மாணவனை தாக்கியதாக குற்றச்சாட்டுக்குள்ளான இயற்பியல் ஆசிரியர் சிவ ரஞ்சித்தை பணியிடை நீக்கம் செய்து பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
Comments