பேரிகார்டுகளில் வளைந்து செல்ல முயன்ற போது லாரி கவிழ்ந்து விபத்து

0 2155
பேரிகார்டுகளில் வளைந்து செல்ல முயன்ற போது லாரி கவிழ்ந்து விபத்து

திண்டிவனம் அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கார்பன் துகள்கள் கொண்ட பெரிய மூட்டைகளை ஏற்றிச் சென்ற லாரி பாரம் தாங்காமல் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

கும்மிடிப்பூண்டியில் இருந்து பெரம்பலூரை நோக்கி அந்த லாரி சென்றுக் கொண்டிருந்தது. பாதிராப்புலியூர் அருகே சாலையில் அமைக்கப்பட்டிருந்த பேரிகார்டுகளுக்குள் புகுந்து வளைந்து செல்ல முயன்ற லாரி, கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

அந்த இடம் வளைவு என்பதாலும், அதிக விபத்துகள் நடைபெறுவதாலும் வாகனங்களின் வேகத்தை குறைப்பதற்காக காவல்துறையினர் ஜிக் ஜாக் முறையில் பேரிகார்டுகளை அமைத்துள்ளனர்.

அந்த பேரிகார்டுகளில் வளைந்து செல்ல முயன்ற போது லாரி பாரம் தாங்காமல், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments