எல்லைப் பாதுகாப்புப் படையின் அதிகார வரம்பை நீட்டிக்கும் மத்திய அரசின் நடவடிக்கையை எதிர்த்து பஞ்சாப் அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு.!
எல்லைப் பாதுகாப்புப் படையின் அதிகார வரம்பை நீட்டிக்கும் மத்திய அரசின் நடவடிக்கையை எதிர்த்து பஞ்சாப் அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
இதுதொடர்பாக அம்மாநில அரசு தாக்கல் செய்துள்ள மனுவில், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவது மாநிலத்தின் கடமையின் மீதான அத்துமீறல் என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் மாநில அரசைக் ஆலோசிக்காமல் எடுக்கப்பட்ட முடிவு, மக்களிடையே அமைதியின்மைக்கு வழிவகுக்கும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த முடிவுக்கு ஏற்கனவே திரிணாமூல் காங்கிரஸ் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments