பிரேசிலில் சுகாதாரத்துறை இணையத்தளத்தில் தடுப்பூசி செலுத்தியவர்களின் தகவல்களை அழித்த ஹேக்கர்கள்

0 2301

பிரேசில் அரசின் சுகாதாரத்துறை இணையத்தளத்தை முடக்கிய ஹேக்கர்கள், அதில் இருந்த கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களின் தகவல்களை அழித்து விட்டனர்.

வெள்ளிக்கிழமை அதிகாலை சுகாதாரத்துறை இணையதளத்தை ஹேக் செய்த மர்ம நபர்கள், சர்வரில் இருந்து தடுப்பூசி செலுத்தியவர்களின் விவரங்களை காப்பி செய்து விட்டு, பின் அவற்றை அழித்து விட்டனர்.

அந்த தகவல்களை திரும்ப பெற வேண்டுமானால் அரசு தங்களை இ-மெயில் மூலம் தொடர்பு கொள்ளுமாறு சுகாதாரத்துறை இணையத்தளத்திலேயே அவர்கள் பதிவிட்டுள்ளனர்.

அழிக்கப்பட்ட அனைத்து தரவுகளும் தங்களிடம் உள்ளதாகவும் இணையதளத்தை விரைவில் மீட்டுவிடுவதாகவும் அரசு தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments