துபாயில் திருடப்பட்ட மரோடோனாவின் கைக்கெடிகாரம் அசாமில் மீட்பு

0 2838

துபாயில் திருடப்பட்ட மறைந்த கால்பந்து ஜாம்பவான் மரோடோனாவிற்கு சொந்தமான 20 லட்ச ரூபாய் மதிப்புள்ள கைக்கடிகாரம் அசாமில் மீட்கப்பட்டுள்ளது.

அர்ஜென்டினாவைச் சேர்ந்த மரோடோனாவின் கைக்கடிகாரம் மற்றும் இதர பொருட்கள் துபாயில் ஒரு தனியார் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் அதன் காவலாளியாக பணியாற்றி வந்த வாசித் ஹுசைன் அந்த கைக்கடிகாரத்தை திருடிவிட்டு கடந்த ஆகஸ்டில், தனது தந்தைக்கு உடல்நிலை சரியில்லை எனக்கூறி இந்தியா திரும்பியுள்ளார்.

இதனை அடுத்து, துபாய் காவல்துறையினர் அளித்த தகவலின் அடிப்படையில் அசாம் மாநிலம் சிப்சாகர் பகுதியைச் சேர்ந்த வாசித், அம்மாநில போலீசாரால் கைது செய்யப்பட்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments