முன்விரோதம் காரணமாக சக ஊழியர்களை வெட்டிய கடையின் மேலாளர் கைது

0 2664
முன்விரோதம் காரணமாக சக ஊழியர்களை வெட்டிய கடையின் மேலாளர் கைது

நெல்லை பாளையங்கோட்டையில் பட்டப்பகலில் செல்போன் கடை மேலாளர் ஒருவர் சக ஊழியர்கள் இருவரை அரிவாளால் வெட்டிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

முருகன் குறிச்சியில் இயங்கி வரும் அபூர்வா மொபைல்ஸ் என்ற அந்த செல்போன் கடையில் மேலாளராகப் பணியாற்றி வந்த செல்வம் என்பவனுக்கும் ஊழியர்கள் சிலருக்கும் வருகைப் பதிவேட்டில் நேரம் குறிப்பது தொடர்பாக பிரச்சனை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், சனிக்கிழமை விடுமுறையில் இருந்த மேலாளர் செல்வம் திடீரென கடைக்குள் வந்துள்ளான். சக ஊழியர்களிடம் சகஜமாகப் பேசியவாறே நின்றிருந்தவன், திடீரென இடுப்பில் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து மைதீன் என்பவரை வெட்டினான்.

அவனைத் தடுக்க வந்த பஷீர் என்பவருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. வெட்டுப்பட்ட இருவரும் சிகிச்சை பெற்று வரும் நிலையில், செல்வத்தை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments