கென்டக்கி, அர்கன்சாஸ் உள்ளிட்ட மாகாணங்களில் தாக்கிய சூறாவளிக் காற்று ; 50க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

0 2379
கென்டக்கி, அர்கன்சாஸ் உள்ளிட்ட மாகாணங்களில் தாக்கிய சூறாவளிக் காற்று

அமெரிக்காவின் கென்டக்கி, அர்கன்சாஸ் உள்ளிட்ட மாகாணங்களில் சூறாவளிக் காற்று தாக்கியதில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக அஞ்சப்படுகிறது.

அர்கன்சாஸ், இல்லினாய்ஸ், கென்டக்கி உள்ளிட்ட மாகாணங்களில் வெள்ளிக்கிழமையன்று பலத்த சூறாவளி காற்று வீசியது. இதனை அடுத்து, கட்டிடங்கள், வாகனங்கள் உள்ளிட்டவை சேதமான நிலையில் சுமார் ஒரு லட்சத்து 80 ஆயிரம் பேர் மின்சாரம் இன்றி இருளில் மூழ்கியுள்ளனர்.

இது தொடர்பாக பேசிய கென்டக்கி மாகாண ஆளுநர் ஆண்டி பெஷேர்  சூறாவளி தாக்கியதில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என்றும் பலி எண்ணிக்கை 70 முதல் 100 வரை உயர வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்ட அவர், வரலாற்றில் கென்டக்கி மாகாணம் எதிர்கொண்ட சூறாவளியிலேயே இது மிக கடுமையானது என தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments