திருமணம் செய்துவிட்டு ஏமாற்றிய கிராம நிர்வாக அலுவலர் ; காதல் மனைவி தர்ணா போராட்டம்

0 3556
திருமணம் செய்துவிட்டு ஏமாற்றிய கிராம நிர்வாக அலுவலர்

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே, திருமணம் செய்துவிட்டு ஏமாற்றிய கிராம நிர்வாக அலுவலர் வீட்டின் முன்பாக காதல் மனைவி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

பிள்ளையார்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ராம்குமார், இந்நிலையில்,அதே பகுதியை சேர்ந்த ஈஸ்வரி என்ற பெண்ணை மூன்றாண்டுகளாக காதலித்து வந்த நிலையில், 3 மாதங்களுக்கு முன் அவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், ராம்குமார் தனது பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ளும் வரை ஈஸ்வரியை அவரது பெற்றோர் வீட்டில் இருக்குமாறு கூறியுள்ளார். திருமணமாகி 3 மாதங்கள் வரை ஆகியும், தனது கணவர் அழைக்காததால், அவர் வீட்டின் முன்பாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

தகவலறிந்த வந்த வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments