குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தில் விமானப் படை அதிகாரிகள் 3ஆவது நாளாக விசாரணை

0 2143

நீலகிரி மாவட்டம் குன்னூரில் இராணுவ ஹெலிகாப்டர் விபத்து நிகழ்ந்த இடத்தில் 3ஆவது நாளாக இந்திய விமானப்படை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

நஞ்சப்பா சமுத்திரம் அருகே அடர்ந்த வனப்பகுதியில் விமானப்படைக்குச் சொந்தமான அந்த ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி, முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் இராவத் உட்பட 13 பேர் பலியாகினர். இந்த நிலையில் விபத்து நிகழ்ந்த பகுதி முழுக்க இராணுவ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, ஹெலிகாப்டரின் உதிர்பாகங்களை சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

3ஆவது நாளாக இந்தப் பணியில் விமானப்படை வீரர்களுடன், தமிழகக் காவல்துறையும் கைகோர்த்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments