தமிழகத்தில் இன்று 14வது மெகா தடுப்பூசி முகாம்

0 2972

தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் 14-வது மெகா தடுப்பூசி முகாம் இன்று நடைபெறுகிறது.

காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த தடுப்பூசி முகாமில் காலக்கெடு முடிந்தும் 2-வது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. சென்னையில் மட்டும் 1,600 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடைபெற உள்ளன. சென்னையில் இதுவரை 10 லட்சத்து 38 ஆயிரத்து 623 பேர் 2-வது தவணை தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர்.

எனவே தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத நபர்கள் இந்த முகாமை பயன்படுத்தி தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை உயர் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments