18 வயது தாண்டிய மாணவர்கள் தடுப்பூசி செலுத்தவேண்டும் - அமைச்சர் மா.சுப்ரமணியன்

0 2638

18 வயது நிறைவடைந்த தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத மாணவர்களுக்கு கல்லூரிகளில் அனுமதி இல்லை என்று, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள கல்வி நிறுவனங்களின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற பின்னர், அவர் இவ்வாறு தெரிவித்தார். இக்கூட்டத்தில் கல்லூரிகளில் கொரோனா தொற்று ஏற்படுவதை தடுக்கவும், புதிய வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.

கல்லூரிகளில் கலைநிகழ்ச்சி உள்ளிட்ட மாணவர்கள் அதிகம் கூடும் விழாக்களுக்கு அனுமதி இல்லை என்று குறிப்பிட்ட அமைச்சர் மா.சுப்ரமணியன், விடுதியில் உணவருந்த ஒரேநேரத்தில் அதிக மாணவர்களை அனுமதிக்க கூடாது, என்றும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments