சாலையைக் கடக்க முயன்ற பள்ளி மாணவி மீது, கண்டெய்னர் லாரி மோதி விபத்து.. பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்

0 4935

சென்னை அடுத்த மணலி புதுநகரில், சைக்கிளில் சாலையைக் கடக்க முயன்ற பள்ளி மாணவி மீது, கண்டெய்னர் லாரி மோதிய விபத்தின் பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

ஆண்டார்குப்பம் பகுதியில் சாலையைக் கடப்பதற்காக சைக்கிளில் நின்று கொண்டிருந்த பள்ளி மாணவி, மெது, மெதுவாக சைக்கிளை நகர்த்திக் கொண்டே முன்னோக்கி சென்றார். அப்போது, இருசக்கர வாகன ஓட்டி ஒருவர் வேகமாக சாலையைக் கடந்ததை பார்த்து, அவர் பின்னாடியே அவசரமாக செல்ல முயன்ற பள்ளி மாணவி, அவ்வழியாக வந்து வளைவில் திரும்ப முயன்ற கண்டெய்னர் லாரியின் முன்சக்கரத்தில் சிக்கிக் கொண்டார். இதில், மாணவிக்கு கால் முறிவு ஏற்பட்டுள்ள நிலையில், சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

இருப்பினும், மணலி புதுநகர் பகுதியில் வரைமுறையின்றி கண்டெய்னர் லாரிகள் இயக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். போக்குவரத்து போலீசார் உள்ளிட்ட காவல்துறையினர், கண்டெய்னர் லாரிகள் போக்குவரத்தை சீர்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments