லாரி மோதியதில் ஆற்றில் கவிழ்ந்து விழுந்த ஆட்டோ... வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பயணிகள்!

0 3646

ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே பீரபேரு தரைப்பாலத்தில் சென்று கொண்டிருந்த ஷேர் ஆட்டோ மீது எதிரே வந்த லாரி மோதியதில், ஆட்டோ ஆற்றில் கவிழ்ந்து விழுந்தது.

ஆத்மகூரில் இருந்து பீரபேரு அருகே உள்ள சிவன் கோவிலில் சாமி கும்பிடுவதற்காக, நேற்று இரவு 12 பேர் ஷேர் ஆட்டோவில், தரைப்பாலத்தில் சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில், எதிரே வந்த லாரி ஆட்டோ மீது மோதியதில், நிலை குலைந்த ஆட்டோ ஆற்றில் கவிழ்ந்து, அதில் பயணித்தவர்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்.

அவ்வழியாக சென்றவர்கள் 7 பேரை மீட்ட நிலையில், மாயமான 5 பேரை தேடும் பணியில் போலீசார் மற்றும்  தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments