அட்டவணைப்படி இயக்கப்படும் சர்வதேச விமான சேவைகள் மீதான தடை வரும் ஜனவரி 31.ஆம் தேதி வரை நீட்டிப்பு - சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம்.!
அட்டவணைப்படி இயக்கப்படும் சர்வதேச விமான சேவைகள் மீதான தடையை வரும் ஜனவரி மாதம் 31 ஆம் தேதி வரை நீட்டிப்பதாக DGCA எனப்படும் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் அறிவித்துள்ளது.
இந்த மாதம் 15 ஆம் தேதி அட்டவணைப்படியான சர்வதேச விமானப் போக்குவரத்தை மீண்டும் துவக்க திட்டமிட்ட நிலையில், ஒமைக்ரான் பரவல் காரணமாக அது தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்த தடை நீட்டிப்பானது சரக்கு மற்றும் DGCA வால் ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ள சர்வதேச விமான சேவைகளுக்கு பொருந்தாது. தடை நீட்டிக்கப்பட்டாலும், குறிப்பிட்ட சில வழித்தடங்களில் சர்வதேச விமானங்களை இயக்க DGCA அனுமதி வழங்க கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments