பிற மாநிலத்தவர்கள் மேற்குவங்கத்தில் அரசுப்பணியாற்ற விரும்பினால், வங்காள மொழியை கட்டாயம் கற்க வேண்டும் - மமதா பானர்ஜி அதிரடி

0 2947

மேற்குவங்கத்தில் மாநில மொழி பேச தெரிந்தவர்களுக்கே அரசு வேலையில் முன்னுரிமை வழங்கப்படும் என முதலமைச்சர் மமதா பானர்ஜி அறிவித்துள்ளார்.

மால்டா மாவட்டத்தில் நடந்த நிர்வாக கூட்டத்தில் உரையாற்றிய போது இதனை தெரிவித்த அவர், மேற்குவங்க குடியிருப்பாளர்களுக்கே அரசு வேலையில் அதிக முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவித்தார்.

பிற மாநிலத்தவர்கள் மேற்குவங்கத்தில் அரசுப்பணியாற்ற விரும்பினால் அவர்கள்  வங்காள மொழியை அறிந்தாக வேண்டியது கட்டாயம் எனவும் அவர் கூறியுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments