வடகிழக்குப் பருவக் காற்றின் காரணமாக தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக் கூடும் - வானிலை ஆய்வு மையம்

0 30291

வடகிழக்குப் பருவக் காற்றின் காரணமாக மதுரை, சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யக் கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பிற மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது. நாளை தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது.

சென்னையில் அடுத்த 24 மணி நேரத்துக்கு ஒரு சில இடங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments