டெல்லியில் விவசாயிகள் நடத்தி வந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது..!

0 3410

டெல்லியில், ஒரு வருடத்திற்கும் மேலாக நடைபெற்ற போராட்டத்தை முடித்துக் கொள்வதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

வேளாண் சட்டங்களை மத்திய அரசு வாபஸ் பெற்ற பின்னரும், வேறு சில கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்கங்களை சேர்ந்தவர்கள் தங்களது போராட்டத்தை டெல்லியின் எல்லைகளில் தொடர்ந்தனர்.

இந்த நிலையில் அவர்களின் பெரும்பாலான கோரிக்கைகளை ஏற்பதாக அரசு  அதிகாரப்பூர்வ கடிதம் வழங்கியது. அதை ஏற்று போராட்டத்தை முடித்துக் கொள்வதாகவும், வெற்றிப் பேரணி நடத்தியபின் வரும் 11ஆம் தேதி டெல்லி எல்லைகளை காலி செய்து விட்டு வீடுகளுக்கு திரும்புவதாகவும் சம்யுக்த கிசான் மோர்ச்சா தலைவர்கள் அறிவித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments