முடிவுக்கு வந்தது 14 மாத கால விவசாயிகளின் போராட்டம்

0 2785

14 மாதங்களாக வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியின் எல்லைகளில் போராட்டம் நடத்தி வந்த விவசாயிகள் அதை இன்று கைவிடுகின்றனர்.

வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்து, அதற்கான மசோதாவும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஆனாலும் சில கோரிக்கைகளுக்கு மத்திய அரசு எழுத்துபூர்வமான உறுதி அளிக்கும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை என விவசாய சங்கங்கள் அறிவித்தன.

குறைந்தபட்ச ஆதரவு விலை, விவசாயிகள் மீது போடப்பட்ட கிரிமினல் வழக்குகளை வாபஸ் பெற வேண்டும், போராட்டத்தின் போது உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு நிவாரணம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற அவர்கள் கெடு விதித்தன.

அதை ஏற்று வரைவு திட்டம் ஒன்றை தயாராக்கி விவசாய சங்கங்களுக்கு அரசு அனுப்பியது. அதை தொடர்ந்து இன்று போராட்டத்தை கைவிடுவதாக விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments