ரூ.25 கொடுக்காததால் குடிபோதையில் ஒருவர் அடித்துக்கொலை

0 2970

திருவள்ளூரில் 25 ரூபாய் கொடுக்காததால்  ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டார்.

ஆவடியை சேர்ந்த சிவக்குமார் மற்றும் பூபதி இருவரும் கட்டிடத் தொழில் செய்து வந்துள்ளனர். மதுபானக்கடையில் மதுவருந்த சென்ற இருவரும் பணத்தை பங்கிட்டுள்ளனர். இதில் சிவக்குமாருக்கு 25 ரூபாய் தரவேண்டிய நிலையில் பூபதி கொடுக்க மறுத்ததாகக் கூறப்படுகிறது.

குடிபோதையில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் ஆத்திரமடைந்த சிவக்குமார் அருகிலிருந்த இரும்பு ராடால் பூபதியை அடித்துள்ளார். இரும்பு ராடை பிடுங்கிய பூபதி சிவக்குமாரை சரமாரியாக தாக்கியுள்ளார்.இதில் சிவக்குமார் உயிரிழந்த நிலையில்  பூபதியை கைது செய்த போலீசார் சிறையிலடைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments