முப்படை தலைமை தளபதி பதவிக்கு ஜெனரல் நரவனேயின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டிருப்பதாக தகவல்

0 17086
முப்படை தலைமை தளபதி பதவிக்கு ஜெனரல் நரவனேயின் பெயர் பரிந்துரை

பிபின் ராவத் அகால மரணம் அடைந்ததையடுத்து முப்படைத் தலைமை தளபதி பதவிக்கு ஜெனரல் நரவனேயின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதன்முதலாக முப்படைக்கும் ஒரே தலைமைத் தளபதி என்ற பதவி உருவாக்கப்பட்டு பிபின் ராவத் நியமிக்கப்பட்டிருந்தார். அவரது மறைவைத் தொடர்ந்து அப்பதவிக்கு நரவனேயை நியமிக்க பாதுகாப்பு அமைச்சகம் பரிசீலித்து வருகிறது.

அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தமது 62 வயது வயதில் நாரவானே ஓய்வு பெறுகிறார். ஆனால் முப்படைகளின் தலைமைத் தளபதி பதவி அவருக்கு வழங்கப்பட்டால் அவர் 65 வயது வரை பணிகளைத் தொடர முடியும்.

கிழக்கு லடாக்கில் சீனாவுடன் இந்தியப் படைகள் நேருக்கு நேர் நிற்கும் சூழ்நிலையில் முப்படைகளின் ஒத்துழைப்பும் செயல்திறனும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது .

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments