பணப்பரிவர்த்தனை முறைகேடு வழக்கு ; நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டசிடம் இன்று அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை

0 4283
நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டசிடம் இன்று அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை

200 கோடி ரூபாய் முறைகேடாகப் பணப்பரிவர்த்தனை செய்ததாக சுகேஷ் சந்திரசேகர் உள்ளிட்டோர் மீது தொடரப்பட்ட வழக்கில் நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டசிடம் இன்று அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை துபாய் செல்ல மும்பை விமான நிலையத்துக்கு வந்த ஜாக்குலின் அமலாக்கத் துறை அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார்.

அவர் இன்று டெல்லியில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பி வைக்கப்பட்டது. சுகேஷ் சந்திரசேகர் நடிகைக்கு பத்து கோடி ரூபாய்க்கு பரிசுப் பொருட்களை அளித்துள்ளதாகவும் கடந்த ஜனவரி மாதம் முதல் இருவரும் மிகவும் நெருக்கமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதே போல் சுகேஷூடன் நெருக்கமாக இருந்த பாலிவுட்டின் மற்றொரு நடிகையான நோரா ஃபத்தேயின் மீதும் இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments