ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கில் அவரது தந்தை சிபிஐ விசாரணைக்கு ஆஜர்!

0 3369

சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கில், அவரது தந்தை சிபிஐ விசாரணைக்கு ஆஜரானார்.

சேர்ந்த அந்த மாணவி, கடந்த 2019-ல் ஐஐடி விடுதியில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில், பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் தான் காரணம், என குறிப்பிட்டிருந்த அவரது செல்போன் பதிவுகளால் வழக்கில் திருப்பம் ஏற்பட்டது. இதனிடையே சம்பந்தப்பட்ட பேராசிரியர்கள் தொடர்பான ஆதாரங்கள் இருந்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என மாணவியின் குடும்பத்தினர், சிபிஐ விசாரணை மீது அதிருப்தி தெரிவித்தனர்.

இதையடுத்து அவரது தந்தை அப்துல் லத்தீப்பிற்கு சிபிஐ சம்மன் அனுப்பியது. அதன்படி சென்னை பெசன்ட் நகரில் உள்ள சிபிஐ அலுவலகத்தில், மாணவியின் தந்தை விசாரணைக்கு ஆஜரானார். இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஐஐடி பேராசிரியர்கள் இன்னும் விசாரணைக்கு அழைக்கப்படவில்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments