வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த மேலும் 2 பேருக்கு கொரோனா

0 6493
வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த மேலும் 2 பேருக்கு கொரோனா

வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஒருவருக்கும், திருச்சியில் ஒருவருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

தொற்று பாதித்தோருடன் பயணித்த 30 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதன் மூலம் சமீபத்தில், வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்தவர்களில், கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளது.

இவர்களுக்கு முதற்கட்டமாக எடுக்கப்பட்ட டேக்பாத் பரிசோதனையில் தொற்று உருமாறவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 1-ந் தேதி முதல் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருவோர் சென்னை, மதுரை, திருச்சி, கோவை ஆகிய விமான நிலையங்களில் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments