பீகாரில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக போலி பெயர்ப் பட்டியல் வெளியானதால் பரபரப்பு

0 3172
பீகாரில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக போலி பெயர்ப் பட்டியல் வெளியானதால் பரபரப்பு

பீகார் மாநிலத்தில் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக அரசியல் தலைவர்கள் மற்றும் திரைப் பிரபலங்களின் பெயர்களில் போலிப் பட்டியல் வெளியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அர்வால் மாவட்டத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் பெயர் பட்டியல் வெளியாகி உள்ளது. அதில் பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா, சோனியா காந்தி, அமிதாப் பச்சன், பிரியங்கா சோப்ரா ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

மேலும் இவர்களில் ஒருவரின் பெயரே பலமுறை இடம் பெற்றுள்ளதைக் கண்ட பீகார் சுகாதார அமைச்சர் மங்கள் பாண்டே, மோசடி குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். முதற்கட்டமாக பெயர்களை பதிவேற்றம் செய்த இரு கணினி பொறியாளர்கள் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments