இந்திய - ரஷ்ய பாதுகாப்பு ஒத்துழைப்பைச் சீர்குலைக்க அமெரிக்கா முயன்றது - ஷ்ய வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவ்

0 2938

எஸ் 400 ஏவுகணை அமைப்பை இந்தியா வாங்கும் உடன்படிக்கை, இன்றைய சூழலில் இந்தியாவின் பாதுகாப்புத் திறனை அதிகரிக்கும் வகையில் உள்ளதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜீ லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.

செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்த அவர், எஸ் 400 ஏவுகணை அமைப்பை இந்தியாவுக்கு விற்கும் உடன்பாடு நடைமுறைக்கு வந்துள்ளதாகத் தெரிவித்தார். இந்தியா - ரஷ்யா இடையிலான பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பைச் சீர்குலைக்க அமெரிக்கா பல முயற்சிகளைச் செய்ததாகத் தெரிவித்தார்.

யாரிடம் ஆயுதம் வாங்குவது, யாருடன் நட்புறவு கொள்வது என்பதைத் தாங்களே தீர்மானிப்போம் என இந்தியா தெளிவாகக் கூறி விட்டதாகவும் லாவ்ரோவ் தெரிவித்தார். 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments