தமிழக அரசைக் கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் வருகிற 9 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அதிமுக அறிவிப்பு

0 3004
தமிழக அரசைக் கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்

தமிழக அரசை கண்டித்து, வருகிற 9 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அதிமுக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக ஓபிஎஸ்,இபிஎஸ் வெளியிட்ட அறிக்கையில், பெட்ரோல், டீசல் மீதான மாநில அரசின் வரிகைளை உடனடியாக குறைக்க வேண்டும், அம்மா மினி கிளினிக்குகளை மூடக்கூடாது உள்ளிட்டவற்றை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இதில் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் திரளாக பங்கேற்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments