திருவல்லிக்கேணி காவல் நிலையத்துக்கு வந்த மர்ம பார்சல்…. உள்ளே இருந்தது?

0 6173

சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்துக்கு வந்த மர்ம பார்சலால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இன்று காலை காவல்நிலையத்திற்கு வந்த மர்ம நபர் ஒருவர் அங்குள்ள காவலரிடம் ஒரு பார்சலை கொடுத்து எஸ்.ஐ.யிடம் கொடுக்குமாறு கூறிவிட்டு சென்றுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவல் உயர் அதிகாரிகள் சந்தேகமடைந்து அந்த பார்சலை அருகில் உள்ள காலி மைதானத்திற்கு எடுத்துச் சென்றனர்.

பின்னர் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசாரும் வந்து சோதனை செய்தனர்.   சந்தேகத்துக்குரிய வெடிக்க கூடிய பொருட்கள் எதுவும் இல்லாததால் பார்சலை திறந்து பார்த்தபோது, உள்ளே முந்திரி பருப்பும், சாக்லேட்டும் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அந்த பார்சல் பரிசுப் பொருளாக வந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments