அதிமுக தலைமை பதவிகளுக்கான தேர்தலில் ஒ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வேட்புமனு தாக்கல்

0 8211
அதிமுக தலைமை பதவிகளுக்கான தேர்தலில் ஒ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வேட்புமனு தாக்கல்

அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கான தேர்தலில், ஒ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

அதன்படி, இப்பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் மாலை 3 மணியுடன் நிறைவடைந்தது. இதற்கான தேர்தல், டிசம்பர் 7-ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் என்றும், மறுநாள் வாக்குகள் எண்ணிப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும், என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த அதிமுக தேர்தல் நடத்தும் ஆணையாளரும், முன்னாள் அமைச்சருமான பொன்னையன், உள்கட்சி தேர்தல் ஜனநாயக முறையில் நடைபெறுவதாகவும், தற்போது வரை எந்தவித புகார்களும் வரவில்லை என்றும் தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments