முந்தைய காங்கிரஸ் அரசுகள் நாட்டின் மதிப்பு வாய்ந்த காலகட்டங்களை வீணடித்து விட்டன ; பிரதமர் மோடி குற்றச்சாட்டு

0 7442
முந்தைய காங்கிரஸ் அரசுகள் நாட்டின் மதிப்பு வாய்ந்த காலகட்டங்களை வீணடித்து விட்டன

முந்தைய காங்கிரஸ் அரசுகள் நாட்டின் மதிப்புவாய்ந்த காலகட்டங்களை வீணடித்து விட்டதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டி உள்ளார்.

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் 18 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டங்களை துவக்கி வைத்து அவர் பேசினார். இந்த நூற்றாண்டின் துவக்கத்தில் நாட்டின் சாலைப்போக்குவரத்து உள்ளிட்ட கட்டமைப்புகளை அதிகரிக்கும் பணியை முன்னாள் பிரதமர் வாஜ்பாய் துவக்கியதாக மோடி கூறினார்.

அவருக்குப் பின்னர் 10 ஆண்டு காலம் நாட்டை ஆண்ட காங்கிரசார் சாலைவசதிகளை மேம்படுத்தாமல் காலத்தை வீண்டித்தனர் என்றார் அவர். அந்த இழப்புகளை சரிகட்டுவதற்காக இப்போது தமது அரசு மகாயாகம் நடத்துவதாக மோடி குறிப்பிட்டார்.

டெல்லி-டேராடூன் பொருளாதார காரிடாரை துவக்கி வைத்த பிரதமர், உத்தரகார்ண்டில் மட்டும் கடந்த 5 வருடங்களில் தமது அரசு ஒரு லட்சம் கோடி மதிப்பிலான சாலைத் திட்டங்களை கொண்டுவந்துள்ளதாக கூறினார்.

தற்போது நாடு முழுதும் 100 லட்சம் கோடி மதிப்பிலான நவீன கட்டமைப்புப் பணிகளை மத்திய அரசு நடைமுறைப்படுத்தி வருவதாகவும் மோடி தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments