பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் அமரீந்தர் சிங் மற்றும் சுக்தேவ் சிங் திண்ட்சாவுடன் பாஜக கூட்டணி அமைக்கும் ; உள்துறை அமைச்சர் அமித் ஷா

0 6745
பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் அமரீந்தர் சிங் மற்றும் சுக்தேவ் சிங் திண்ட்சாவுடன் பாஜக கூட்டணி அமைக்கும்

அடுத்த ஆண்டு நடக்க உள்ள பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் மற்றும் முன்னாள் அகாலி தலைவர் சுக்தேவ் சிங் திண்ட்சாவுடன் பாஜக கூட்டணி அமைக்கும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இதை தெரிவித்த அவர், வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர பெரிய மனதுடன் அவற்றை பிரதமர் மோடி வாபஸ் பெற்றதாக தெரிவித்தார்.

ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்குவது பற்றி குறிப்பிட்ட அவர், அதற்கான சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் அதன்பின்னர் அங்கு சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்படும் என கூறினார். உத்தரப் பிரதேசத்தில் எத்தனை எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்தாலும் அங்கு பாஜகவின் வெற்றியை அது பாதிக்காது என்று தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments