வெளிநாட்டிலிருந்து தமிழ்நாடு வந்தவர்களில் 4 பேருக்கு கொரோனா

0 3060

வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாடு திரும்பியவர்களில் இதுவரை 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே பிரிட்டனில் இருந்து சென்னை விமான நிலையம் வந்த சிறுமி உள்பட 2 பேர், சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த ஒருவருக்கு  கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று இலங்கையில் இருந்து சென்னை வந்த பெண் ஒருவருக்கும் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இதனை அடுத்து, ஒமிக்ரான் தொற்று பாதிப்பு உள்ளதா என்பதை கண்டறிய 4 பேரின் மாதிரிகள் மரபியல் பகுப்பாய்வு சோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில், அவர்கள் தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர்.

இந்நிலையில், சென்னை தேனாம்பேட்டையில் கொரோனா தடுப்பூசி முகாமை பார்வையிட்ட பின் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், விமானம் மூலம் தமிழகம் வந்து கொரோனா உறுதியானவர்களுக்கு ஒமிக்ரான் பாதிப்பு இருக்க வாய்ப்பு குறைவு என முதற்கட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளதாகவும், அவர்கள் நலமாக உள்ளதாகவும் குறிப்பிட்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments