கூட்டுறவு சங்கங்களில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் பெற்ற கடன் தள்ளுபடி

0 21159

கூட்டுறவு நிறுவனங்களில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான கடன்களில் இந்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை உள்ள நிலுவைத் தொகையில் அபராத வட்டி மற்றும் இதர செலவினங்களை தவிர்த்து, அசல் தொகையான2 ஆயிரத்து 459 கோடியே 57லட்சம் ரூபாயும், வட்டித் தொகையான 215 கோடியே 07 லட்சம் ரூபாயும் என மொத்தம் 2 ஆயிரத்து 674 கோடியே 64 லட்சம் ரூபாயை தள்ளுபடி செய்து தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 13 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட வரவு செலவு திட்டத்தில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன் தொகை 2 ஆயிரத்து 756 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தபடி இப்போது அது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments