அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு வேட்பு மனுதாக்கல் தொடக்கம்..

0 3254

அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு போட்டியிடுவோருக்கான வேட்பு மனு தாக்கல் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

அண்மையில் நடந்த அதிமுக செயற்குழு கூட்டத்தில் கட்சியின் அனைத்து அடிப்படை உறுப்பினர்களால் ஒற்றை வாக்கு முறையில் இனி கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு செய்யப்படுவார்கள் என சட்ட விதிகளில் மாற்றம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், 7-ந் தேதியன்று நடக்கவுள்ள தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. வேட்பு மனு தாக்கலுக்கான கால அவகாசம் நாளை மாலையுடன் முடிவடையும் நிலையில், ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் நாளை மனுதாக்கல் செய்யவுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments