இரவு முழுவதும் மரக்கிளையை பிடித்தவாறு உயிருக்கு போராட்டம்.. ஆற்றின் தரைப்பாலத்தை நள்ளிரவில் கடந்து செல்ல முயன்றதால் விபரீதத்தில் சிக்கிய நபர்

0 4068

சென்னை கோயம்பேட்டில் கூவம் ஆற்றின் தரைப்பாலத்தை கடந்து செல்ல முயன்ற நபர் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட நிலையில், மரக்கிளையை பிடித்துக்கொடு இரவு முழுவதும் உயிருக்கு போராடிய அந்த நபரை தீயணைப்பு வீரர்கள் அதிகாலையில் மீட்டனர்.

கோயம்பேடு காய்கறிச் சந்தையில் வேலை பார்த்து வரும் 38 வயதான மனோஜ் நேற்றிரவு பணி முடிந்து கோயம்பேடு தரைப்பாலத்தை கடந்து செல்ல முயன்றார். குறைவாகத்தான் தண்ணீர் செல்வதாக நினைத்து தரைப்பாலத்தை கடக்க முயற்சித்த நிலையில், நீரோட்டத்தின் வேகத்தில் அடித்து  செல்லப்பட்டார்.

சிறிது தூரம் ஆற்று நீரில் இழுத்து செல்லப்பட்ட மனோஜ் மரக்கிளை ஒன்றை பிடித்துக் கொண்டு உயிருக்கு போராடிய நிலையில், இரவு நேரம் என்பதால் அவரை யாரும் கவனிக்கவில்லை. இந்நிலையில் அதிகாலையில் அந்த வழியாக சென்ற மக்கள் மனோஜை பார்த்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கயிறு மூலம் சென்று அவரை மீட்டு வந்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments