ஏடிஎம் மையத்தில் நூதன முறையில் பண மோசடி... மாநில கபடி நடுவர் கைது

0 10682

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் ஏடிஎம் மையத்தில் நூதனமாக பணம் திருடிய மாநில கபடி நடுவர் கைது செய்யப்பட்டார்.

கீழ்வில்லிவனத்தைச் சேர்ந்த ஏழுமலை என்பவர் கடந்த 27ஆம் தேதி அன்று வந்தவாசி சன்னதி தெருவில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம் மையத்தில் பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். அவருக்கு பணம் எடுக்க தெரியாததால் அருகில் இருந்த நபர் உதவி செய்வது போல் நடித்து 18ஆயிரம் ரூபாயினை நூதன் முறையில் ஏமாற்றி எடுத்துள்ளார்.

இதுதொடர்பான புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் சிசிடிவி உதவியுடன் மர்ம நபரை கைது செய்தனர். விசாரணையில் அவனது பெயர் சரண்ராஜ் என்பதும், மாநில கபடி நடுவர் மட்டுமின்றி தனியார்  பள்ளியில் உடற் கல்வி ஆசிரியராகவும் இருந்து வந்தது தெரியவந்தது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments