5 ஏக்கர் விவசாய நிலத்தை அபகரித்துவிட்டு, பெற்ற மகள்களால் கைவிடப்பட்ட முதிய தம்பதி..!

0 3084

சேலத்தில் 5 ஏக்கர் விவசாய நிலத்தை, பெற்ற மகள்களே ஏமாற்றி அபகரித்துவிட்டு தங்களை பராமரிக்காமலும் உணவளிக்காமலும் கொடுமைப்படுத்தி வீட்டை விட்டு துரத்தி விட்டதாக வயதான தம்பதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

வாழப்பாடி அடுத்த காரிப்பட்டி காட்டுவளவு பகுதியை சேர்ந்த 95 வயது வெள்ளைய கவுண்டர் மற்றும் 85 வயது பெருமாயி அம்மாள் தம்பதிக்கு செல்வமணி மற்றும் தங்கமணி என்ற 2 மகள்கள் உள்ளனர். முதிய தம்பதியின் மகன் உடல்நலக்குறைவால் இறந்து போகவே, மகள்களின் கவனிப்பில் இருவரும் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், தம்பதிக்கு சொந்தமான 5 ஏக்கர் விவசாய நிலத்தை இரு மகள்களும், மகன் வழி பேரனான ராஜகோபாலும் கூட்டுச் சேர்ந்து அபகரித்துக் கொண்டதாகவும், அதை மீட்டுத் தரக் கோரியும் மனு அளித்துள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments