திருப்பதியில் ஏற்பட்ட பாறை சரிவால் சேதமடைந்துள்ள திருமலைக்கு செல்லும் மலைப்பாதையில், ஐஐடி நிபுணர் குழு ஆய்வு..!

0 19621

திருப்பதியில் ஏற்பட்ட பாறை சரிவால் சேதமடைந்துள்ள திருமலைக்கு செல்லும் மலைப்பாதையில், ஐஐடி நிபுணர் குழு ஆய்வு மேற்கொண்டனது.

திருமலை அருகேயுள்ள வளைவு ஒன்றின் மேற்பகுதியில் இருந்து சுமார் 5 டன் எடை கொண்ட பெரிய பாறை சரிந்து விழுந்த நிலையில், அந்த பாறை மூன்று அடுக்குகளை தாண்டிச் சென்று நின்றது. அதன் காரணமாக சாலைகளில் பிளவுகள் ஏற்பட்டதால், போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், சேதமடைந்த சாலைகளில் நேரடியாக ஆய்வு மேற்கொண்ட ஐஐடி குழுவினர், சாலையை ஒட்டியிருக்கும் உயரமான இடங்கள் அடர்ந்த காட்டு பகுதியாக இருப்பதால் அங்கு ட்ரோன் மூலம் ஆய்வு செய்தனர்.

மேலும், சேதமடைந்த சாலையை சீரமைக்க 4 மாத காலங்கள் ஆகும் எனவும், நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் சாலை சீரமைக்கப்படும் என ஐஐடி நிபுணர் குழு பேராசிரியர் கே. எஸ். ராவ் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments