2022-ம் ஆண்டுக்கான சட்டப்பேரவை கூட்டத்தொடரை புனித ஜார்ஜ் கோட்டையில் நடத்த பூர்வாங்கப் பணிகள் தொடங்கின..

0 3303
2022ஆம் ஆண்டுக்கான சட்டப்பேரவை கூட்டத்தொடரை புனித ஜார்ஜ் கோட்டையிலேயே நடத்துவதற்கான பூர்வாங்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

2022ஆம் ஆண்டுக்கான சட்டப்பேரவை கூட்டத்தொடரை புனித ஜார்ஜ் கோட்டையிலேயே நடத்துவதற்கான பூர்வாங்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

கொரோனா காரணமாக, சட்டப்பேரவை கூட்டத்தொடர் சேப்பாக்கத்திலுள்ள கலைவாணர் அரங்கில் நடத்தப்பட்டு வந்தது. 

இந்த நிலையில், கொரோனா தொற்று குறைந்து வருவதால், அடுத்தாண்டுக்கான சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஆளுநர் உரையுடன் புனித ஜார்ஜ் கோட்டையிலேயே நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்காக செண்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள சட்டப்பேரவை அரங்கத்தை நவீனப்படுத்தி புதுப்பிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

காகிதமில்லா சட்டப்பேரவை என்ற அடிப்படையில் சட்டப்பேரவையில் எம்.எல்.ஏக்களுக்கு கணிணி பொருத்தும் பூர்வாங்க பணிகள் துவங்கியுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments