திங்கட்கிழமை இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின்... ஏ.கே.203 துப்பாக்கிகள் வாங்க ஒப்பந்தம்!

0 3701

ரஷ்ய அதிபர் புதின் திங்கட்கிழமை இந்தியா வர உள்ள நிலையில், இருநாடுகளுக்கு இடையே ஆயுத ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.

ரஷ்யாவிடமிருந்து தானியங்கி ஏ.கே 203 துப்பாக்கிகளை வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது. சுமார் 7 லட்சத்து 50 ஆயிரம் துப்பாக்கிகளை வாங்கும் ஒப்பந்தத்தில் இந்தியா புதின் வருகையின் போது கையெழுத்திட உள்ளது. ஏற்கனவே எஸ்.600 ரக ஏவுகணைத் தடுப்பு சாதனங்களையும் இந்தியா வாங்கியுள்ளது.

ரஷ்யாவின் தொழில்நுட்ப உதவியுடன் இந்த துப்பாக்கிகள் உத்தரப்பிரதேச மாநிலம் அமேதியில் தயாரிக்கப்பட உள்ளன. புதின் கையெழுத்திட்டதும் முதலில் 70 ஆயிரம் துப்பாக்கிகள் ரஷ்யாவின் உதிரி பாகங்களுடன் தயாரிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments