பாகிஸ்தானில் உள்ள கர்தார்பூர் குருத்வாராவில் மாடல் அழகி ஒருவர் எடுத்த புகைப்படம் குறித்து விசாரிக்க பாகிஸ்தான் அதிகாரிக்கு இந்தியா சம்மன்..!

0 8338

பாகிஸ்தானில் உள்ள கர்தார்பூர் குருத்வாராவில் மாடல் அழகி ஒருவர் எடுத்த புகைப்படம் குறித்து விசாரிக்க பாகிஸ்தான் அதிகாரிக்கு இந்தியா சம்மன் அனுப்பியுள்ளது.

பாகிஸ்தான் மாடல் அழகி சவுலேஹா கர்தாபூர் குருத்வாராவில் ஆடை விளம்பரத்திற்காக  போட்டோஷூட் நடத்தினார். அப்போது அவர் தலையை மறைத்திருக்கவில்லை. இதன் மூலம் சவுலேஹா, சீக்கியர்களின் மனதைப் புண்படுத்தி விட்டதாக விமர்சனங்கள் எழுந்தன.

இதுகுறித்து விளக்கம் அளிக்க பாகிஸ்தான் அதிகாரிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்ஸி தெரிவித்துள்ளார். இந்நிலையில் தனது செயலுக்கு மாடல் அழகி சவுலேஹா மன்னிப்புக் கோரியுள்ளார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments