குஜராத் அருகே கடலில் மோதிக்கொண்ட வெளிநாட்டு சரக்கு கப்பல்கள்.. தொடரும் மீட்புப் பணிகள்

0 7248

குஜராத் அருகே சரக்கு கப்பல்கள் மோதிக்கொண்ட சம்பவத்தில், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக, பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கட்ச் வளைகுடா பகுதியில், எவியேட்டர் மற்றும் அட்லான்டிக் கிரேஸ் என்ற, 2 வெளிநாட்டு சரக்குக் கப்பல்கள் மோதிக் கொண்ட சம்பவத்தில், கடலில் எண்ணெய் கலக்கவில்லை என்றும், கடல் மாசடையவில்லை, என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு கடலோர காவல் படையின் கண்காணிப்பு கப்பலும், மீட்புப் பணிகளுக்கான ஹெலிகாப்டரும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இரு கப்பல்களில் இருந்த ஊழியர்கள் பத்திரமாக இருப்பதாக, பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments