"மக்களை தேடி மருத்துவம்" திட்டத்தில் நிரப்பப்படவுள்ள புதிய பணியிடங்களுக்கு கொரோனா காலத்தில் பணியாற்றியவர்களுக்கு 20 மதிப்பெண் வழங்கப்படும் ; அமைச்சர் மா.சுப்பிரமணியன்

0 2925
கொரோனா காலத்தில் பணியாற்றியவர்களுக்கு 20 மதிப்பெண்

"மக்களை தேடி மருத்துவம்" திட்டத்தில் நிரப்பப்படவுள்ள புதிய பணியிடங்களுக்கு, கொரோனா காலத்தில் பணியாற்றியவர்களுக்கு, 20 மதிப்பெண் வழங்கப்படும், என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில், அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இதனை தெரிவித்தார். மேலும், 4,858 செவிலியர்கள், 2,448 சுகாதார ஆய்வாளர்கள் விரைவில் நியமிக்கப்பட்ட உள்ளனர், என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

மேலும், "இன்னுயிர் காப்போம்" திட்டத்தின் கீழ், எந்த நாட்டை சேர்ந்தவராக இருந்தாலும், எந்த மாநிலத்தை சேர்ந்தவராக இருந்தாலும், அவர்களுக்கு உடனடியாக ஒரு லட்சம் ரூபாய், அரசு ஒதுக்கும் என்றும், அவர் குறிப்பிட்டார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments