டிசம்பர் 15 ஆம் தேதி முதல் வழக்கமான சர்வதேச விமானப் போக்குவரத்தை துவக்க மத்திய அரசு அனுமதி அளிக்கும் என தகவல்

0 4205
டிசம்பர் 15 ஆம் தேதி முதல் வழக்கமான சர்வதேச விமானப் போக்குவரத்தை துவக்க மத்திய அரசு அனுமதி அளிக்கும் என தகவல்

டிசம்பர் 15 ஆம் தேதி முதல் வழக்கமான சர்வதேச விமானப் போக்குவரத்தை துவக்க மத்திய அரசு அனுமதி அளிக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

ஆனால் கொரோனா பரவல் குறைந்த நாடுகளுக்கு மட்டுமே விமானங்கள் இயக்கப்படும் எனவும், தொற்று அதிகமுள்ள 14 நாடுகளுக்கு தற்போதுள்ள ஏர் பபிள் ஏற்பாட்டில் மட்டுமே விமானங்கள் தொடர்ந்து இயக்கப்படும் எனவும் சிவில் விமானப்போக்குவரத்து அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

புதிய மரபணு மாற்ற வைரசுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு இயல்பான விமானப் போக்குவரத்து நடத்தப்படமாட்டாது என கூறப்படுகிறது.

இயல்பான விமானப்போக்குவரத்து துவக்கப்பட்டாலும், விமானங்களில் பயணிகளின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படும் என்பதால் பயணக்கட்டணம் மிகவும் அதிகமாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments