சென்னையில் இரண்டரை கோடி ரூபாய் மதிப்பிலான நில மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த நபரை கைது செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசார்!

0 17197

சென்னை வேளச்சேரியில் இரண்டரை கோடி ரூபாய் மதிப்பிலான நில மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த ஒருவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

சுச்சரித்தா என்பவருக்கு சொந்தமான 4 பிளாட்டுகளை விற்று தருவதாக கூறி பொது அதிகாரம் பெற்று, அதை 2 கோடியே 47 லட்ச ரூபாய்க்கு விற்று ஏமாற்றியதாக தொடரப்பட்ட வழக்கில் ஒருவரை கைது செய்து தலைமறைவானவர்களை போலீசார் தேடி வந்தனர்.

வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் பைனான்சியர் அங்கப்பனை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.  

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments