பொறியியல் சேர்க்கைக்கு 2 ஆம் கட்ட கலந்தாய்வை நடத்த உள்ளதாக தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் அறிவிப்பு

0 10604
பொறியியல் சேர்க்கைக்கு 2 ஆம் கட்ட கலந்தாய்வு

கலந்தாய்வில் இடம் கிடைத்தும் கல்லூரிகளில் சேராத மாணவர்களின் இடங்களை நிரப்பிட விரைவில் 2-ம் கட்ட பொறியியல் கலந்தாய்வை தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் நடத்த உள்ளது.

பொதுக் கலந்தாய்வு மற்றும் துணை கலந்தாய்வுகளில் 95 ஆயிரத்து 69 பேருக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. நவம்பர் முதல் வாரத்திற்குள் அவர்கள் சேர்க்கையை உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்ட நிலையில், பல்வேறு காரணங்களால் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட மாணவர்கள் பலர் கல்லூரிகளில் சேரவில்லை.

எனவே அந்த இடங்களை நிரப்ப 2-ம் கட்ட கலந்தாய்வை நடத்த உயர்கல்வித்துறை அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஓரிரு நாட்களில் கலந்தாய்வு நடத்தி முடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments