கனமழைக்கு வாய்ப்புள்ளதால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நொடிக்கு இரண்டாயிரம் கனஅடி நீர் திறப்பு

0 2333
கனமழைக்கு வாய்ப்புள்ளதால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நொடிக்கு இரண்டாயிரம் கனஅடி நீர் திறப்பு

சென்னை பூவிருந்தவல்லி அருகே உள்ள செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நொடிக்கு இரண்டாயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

24 அடி உயரமுள்ள செம்பரம்பாக்கம் ஏரியில் 23 அடிக்குத் தண்ணீர் உள்ளது. திருப்பெரும்புதூர், பிள்ளைப்பாக்கம் ஏரிகளில் இருந்து வெளியேறும் ஆயிரம் கன அடி நீர் செம்பரம்பாக்கம் ஏரிக்கு வந்துகொண்டிருக்கிறது.

நாளை முதல் அதிக மழைப்பொழிவுக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏரியில் இருந்து இரண்டாயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments