பெற்ற குழந்தைகளைக் கொன்று விட்டு தற்கொலைக்கு முயன்ற வழக்கு... தாய்க்கு இரட்டை ஆயுள் தண்டனை

0 3219

சென்னை கீழ்ப்பாக்கத்தில் பெற்ற 2 குழந்தைகளை கொன்று விட்டு தாய் தற்கொலைக்கு முயன்ற வழக்கில், பெண்ணுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட 5-வது கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுவுக்கு அடிமையான கணவர் அளித்த தொல்லையால் ஏற்பட்ட மனவிரக்தியில் மம்தா என்பவர் கடந்த 2015-ஆம் ஆண்டு தன் இரு குழந்தைகளை பாவாடை நாடாவால் கழுத்தை இறுக்கி கொலைச் செய்துவிட்டு, தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதில் மம்தா காப்பாற்றப்பட்ட நிலையில் இதுகுறித்த வழக்கு விசாரணையில் இருந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் மம்தாவுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments