முதலீட்டாளர்கள் மாநாடு.. ரூ.34,723 கோடியில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ..!

0 1910
முதலீட்டாளர்கள் மாநாடு.. ரூ.34,723 கோடியில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ..!

தமிழ்நாட்டில் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சி என்ற இலக்கு விரைவில் எட்டப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கோவையில் நேற்று ''முதலீட்டாளர்களின் முதல் முகவரி - தமிழ்நாடு'' என்ற பெயரில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு நிதிநுட்பக் கொள்கை 2021, வான்வெளி மற்றும் பாதுகாப்பு சார்ந்த தொழில் நிறுவனங்களின் கையேடு ஆகியவற்றை வெளியிட்டார்.

இந்த நிகழ்ச்சியில், சுமார் 34ஆயிரத்து723கோடி ரூபாய் முதலீட்டில் 52 நிறுவனங்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இதன்மூலம் 74,835 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுதவிர, வான்வெளி மற்றும் பாதுகாப்புத்துறை உதிரி பாகங்கள் உற்பத்தி திட்டங்களுக்கு, 7 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து,13 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர், 10 திட்டங்களுக்கான பணிகளையும் துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்து மூன்று முதலீட்டாளர்கள் மாநாடுகளை நடத்தியுள்ளதாகவும், முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம் முதன்மையான மாநிலமாக விளங்குகிறது எனவும் தெரிவித்தார். மேலும், ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சி என்ற இலக்கு விரைவில் எட்டப்படும் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments