புதுச்சேரி மற்றும் கடலூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய குழுவினர் ஆய்வு

0 1783
புதுச்சேரி மற்றும் கடலூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய குழுவினர் ஆய்வு

புதுச்சேரியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகள், விவசாய நிலங்கள் உள்ளிட்டவற்றை உள்துறை இணை செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையிலான மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்.

பிள்ளைச்சாவடி பகுதியில் கடல் அரிப்பு மற்றும் சேதமடைந்த வீடுகள் ஆகியவற்றை பார்வையிட்ட மத்திய குழுவினர், நகரப்பகுதியில் உள்ள இந்திரா காந்தி சதுக்கத்தில் மழைநீர் தேங்கிய பகுதிகளில் உள்ள வீடுகளை ஆய்வு செய்தனர்.

பாகூர் பகுதியில் விளைநிலங்களை பார்வையிட சென்ற மத்திய குழுவினரை முற்றுகையிட்ட விவசாயிகள், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது அதிகாரிகள் யாரும் பயிர்களை வந்து பார்க்கவில்லை என குற்றம்சாட்டினர்.

இதேபோல் கடலூர் மாவட்டத்திலும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகள் மற்றும் விளைநிலங்களை மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments