குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரியும் சிறுத்தை ; குடியிருப்பு வாசிகள் அச்சம்

0 2656
குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரியும் சிறுத்தை

நீலகிரி மாவட்டம் பந்தலூரில் குடியிருப்பு பகுதிக்குள் சிறுத்தை சுற்றித்திரிவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

நீலகிரியில் கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் பெரும்பாலும் வனப்பகுதியை ஒட்டியே அமைந்துள்ளன. எனவே, தேயிலை தோட்டங்களில் காட்டு யானை, புலி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகளவில் காணப்படும்.

இந்நிலையில், பந்தலூர் இந்திரா நகரில் சிறுத்தை ஒன்று சுற்றித் திரியும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments